×

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரிக்கை

 

ஆர்.எஸ் மங்கலம், பிப். 25: ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் கோட்டைகரை ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள, அனுமதி வழங்க வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைக்கரை ஆற்றில், சனவேலி, கொக்கூரணி, செட்டியகோட்டை, ஆனந்துார், கோவிந்தமங்கலம், குலமானிக்கம் வெட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் மணல் உள்ளது. இப்பகுதிகளில் அவ்வப்போது மணல் திருட்டு நடந்து வருகின்றது. ஆகையால் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டுக்களை தடுக்கும் விதமாகவும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிழைப்புக்கு வழிகாட்டும் விதமாகவும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதித்தால் கட்டிடம் கட்டும் உரிமையாளர்களுக்கும் குறைந்த விலையில் மணல் கிடைக்கும் என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதது எனவே கோட்டைக்கரை ஆற்றில், மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கி ஏழை எளிய தொழிலாளர்களின் நலனை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Kotdhakarai river ,
× RELATED இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில்...